சனி, 21 ஏப்ரல், 2012

குவைத் மண்டல நிர்வாகக்குழு கூட்டம்.

த்தியத்தில் உறுதியாய்... சமூகத்தில் இணக்கமாய்... என்ற கொள்கையுடன் குர்'ஆன்-ஸுன்னா  வழிகாட்டுதலின் அடிப்படையில் களமாடி வரும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலத்தின் நிர்வாகக்குழு கூட்டம் ஹவல்லி அல் கபீர் உணவகத்தின் பார்ட்டி ஹாலில், 
20 -4 -2012 வெள்ளியன்று இரவு 8 மணியளவில் நடைபெற்றது. 

தாயகத்தில் எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள மாநிலப் பொதுக்குழு தொடர்பான ஆலோசனை குறித்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கூட்டத்திற்கு மண்டலத்தலைவர் முகவை அப்பாஸ் தலைமை தாங்கினார். மண்டல நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். டி.என்.டி.ஜே.யின்  முன்னாள் குவைத் மண்டலத் தலைவர் சகோதரர் கூத்தூர் ஜாபர் அவர்கள், நிர்வாகிகளின் பண்புகள் என்ற தலைப்பில் சிற்றுரையாற்றினார்.

அதைத் தொடந்து மாநிலப் பொதுக்குழுவில் செயல்படுத்த வேண்டிய விஷயங்கள் குறித்து கருத்துப் பரிமாற்றம் செய்யப்பட்டு சில முடிவுகள் எட்டப்பட்டு, அதை மாநிலத் தலைமைக்கு தெரிவிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. மேலும், மண்டலத்தின் செயலாளராக இருந்த புகாரி ஹசன் மற்றும் துணைச் செயலாளராக இருந்த முபாரக் ஆகியோர் ராஜினாமா அங்கீகரிக்கப்பட்டு,   மண்டலச் செயலாளராக அபூ ஷிபா [எ] அன்வர்பாஷா அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். மண்டலப் பொருளாளராக இருந்த ராஜ்முஹம்மது தாயகத்தில் தங்கிவிட்ட காரணத்தால், அவரது பொறுப்பிற்கு சாதிக் சதாமும், மண்டல கவுரவ ஆலோசகராக கூத்தூர் ஜாபரும் நியமிக்கப்பட்டனர். இறுதியாக துஆ'வுடன் கூட்டம் நிறைவுற்றது அல்ஹம்துலில்லாஹ்.
 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக