வியாழன், 5 ஏப்ரல், 2012

குஜராத் கலவரத்துக்கு அமெரிக்க நகரசபையில் கண்டன தீர்மானம்

குஜராத் மாநிலத்தில் உள்ள கோத்ராவில் கடந்த 2002ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரெயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து கலவரம் மூண்டு பலர் உயிர் இழந்தனர். இந்த கலவரத்துக்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்காவில் உள்ள ஹார்வி நகரசபையில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது.

 மேயர் எரிக் கெல்லெக் தலைமையில் நடைபெற்ற அந்த நகரசபை கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தில், குஜராத்தில் 2002ம் ஆண்டு நடந்த கலவரத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளது. சட்டம்-ஒழுங்கை பராமரிக்க மாநில அரசு தவறி விட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி மறுக்கப்பட்டுள்ளதால் இந்த சம்பவம் கண்டிக்கத்தக்கது' என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஹார்வி நகரசபை சிகாகோவிற்கு புறநகரில் அமைந்துள்ளது. நகரசபை நிறைவேற்றியுள்ள இந்த தீர்மானத்தை அமெரிக்க வாழ் இந்திய முஸ்லிம் கவுன்சில் வரவேற்றுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக