சனி, 18 ஆகஸ்ட், 2012

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம் சார்பாக நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சி!

ந்திய தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம் சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி, 17-8-12 வெள்ளியன்று மாலை மிர்காப் திருச்சி உணவாக பார்ட்டி ஹாலில் சிறப்புடன் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு முகவைஅப்பாஸ் தலைமையேற்க, மண்டலப் பொருளாளர் சாதிக்சதாம் முன்னிலை வகித்தார். மவ்லவி அப்துல்காதிர் மன்பயி அவர்கள், ''மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம்'' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். சஹாபாக்களின் இறையச்சம் பற்றி பல்வேறு சம்பவங்கள் வாயிலாக விளக்கிய அவர், அத்தகைய இறையச்சத்தை இந்த நோன்பின் மூலம் நாம் பெறுவதோடு, ரமலானை தொடர்ந்து வரும் மாதங்களிலும் அந்த இறையச்சம் நமது உள்ளத்தில் ஆழமாக வேரூன்றி இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டார். தொடர்ந்து மண்டலச் செயலாளர் அபூஷிபா அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு அமைப்பு சகோதர்கள் மட்டுமன்றி பொதுவான சகோதர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அல்ஹம்துலில்லாஹ். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக