வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

வங்கதேச வாக்காளர்களை காட்டத் தயாரா? ராஜ்தாக்கரேயிக்கு ஆஸ்மி சவால்.

ந்துத்துவாவாதிகளுக்கு கொள்கை என்ற ஒன்று எப்போதுமே இருந்ததில்லை. தேசியம் என்பார்கள் அந்த தேசியத்தின் ஒரு அங்கமான முஸ்லிம்களை கருவருப்பார்கள். தீவிரவாதத்தை ஒழிப்போம் என்பார்கள் ஆனால் மாலேகான் போன்று குண்டுவைத்து அவர்களே தீவிரவாதிகளாகவும் காட்சிதருவார்கள். ராமராஜ்ஜியம் என்பார்கள் தேர்தல் முடிந்தவுடன் ராமரை, அடுத்த தேர்தல்வரை வனவாசம் அனுப்பிவிடுவார்கள். இந்துக்கள் எந்தப்பிரிவாக இருந்தாலும் அவர்களை பாதுகாப்போம் என்பார்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் இந்துக்க்களாக இருந்தால்கூட அவர்களையும் தாக்குவார்கள். சுருங்கசொன்னால் இந்துத்துவா என்றாலே சுயநலம் என்பதே உண்மை. இதை நிரூபிக்கும் வகையில் அவ்வப்போது அவர்கள்செய்யும் நடவடிக்கைமூலம் உலகுக்கு உணர்த்திவிடுவார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன் மும்பையில் ரயில்வேத்துறை வேலைவாய்ப்பிற்கான நேர்முகத்தேர்வுக்கு வந்த வட இந்தியர்களையும், மும்பையில் வசித்துவந்த வடஇந்தியர்களையும் மும்பையில் தனிராச்சியம் நடத்திக்கொண்டிருக்கும் ராஜ்தாக்கரேயின் ஆட்கள் அடித்து துவைத்து காயப்போட, விஷயம் பெரியஅளவில் எதிரொலித்தவுடன் ராஜ்தாக்கரே கைதுசெய்யப்பட்டார்.பின்பு, வட இந்தியர்களுக்கு எதிராகப்பேசக்கூடாது என்ற நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்பது நினைவிருக்கலாம். இப்போது அஸ்ஸாமில் முஸ்லிம் இனப்படுகொலை நடந்தேறிக்கொண்டிருக்கும் நிலையில், அதை மறைக்கும் வகையில் அசாமில் வங்கதேசத்திலிருந்து ஊடுருவியவர்களால் தான் வன்முறை நிகழ்கிறது என்றும், அதில் மண்ணின் மைந்தர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் அத்வானி ராஜ்தாக்கரே உள்ளிட்ட இந்துத்துவாக்கள் கொக்கரிக்கிறார்கள்.

இந்நிலையில், ராஜதாக்கரேயிக்கு பகிரங்க சவால் விடுத்துள்ளார் சாம்ஜ்வாடி கட்சியின் தலைவர் அபூ ஆஸிம்.
'' ராஜ்தாக்கரே தனது தொகுதியில் வங்கதேச வாக்காளர்கள் இருப்பதாக கூறுகிறார். அவ்வாறு அவரது  வாக்காளர்களில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தை சேர்ந்தவர்களை காட்டிவிட்டால் நான் அரசியலில் இருந்து விலகத் தயார். இல்லையேல் அவர் அரசியலில் இருந்து விலகவேண்டும். மேலும் அவரது தொகுதியில் இருந்து பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தவர் ஒரு லட்சம் பேரை காட்டிவிட்டால் அவருக்கு இரண்டு கோடி ரூபாய் பரிசளிக்கப்படும் என்றும் அபூ ஆஸிம் ஆணித்தரமாக கூறியுள்ளார். 

மேலும், என்னை கீழ்த்தரமாக ராஜ்தாக்கரே விமர்சித்துள்ளார். அதே போன்று அவரையும் என்னால் விமர்சிக்கமுடியும். ஆனால் எனது ஒழுக்கம் என்னைத் தடுக்கிறது என்று கூறியுள்ள ஆஸிம், மும்பையில் 21-ம் தேதி ராஜ்தாக்கரே தடையை மீறி பேரணி நடத்தியதை பற்றி விசாரித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

அசாமில் முஸ்லிம் இனப்படுகொலையை கண்டித்து அனுமதி பெற்று நடத்திய பேரணியில் சில விசமிகள் செய்த கலவரத்தால் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலியாகினர்.  44 போலீசார் உள்பட 52 பேர் படுகாயம் அடைந்தனர். அதே நேரத்தில் மும்பை வன்முறையை கண்டித்து தடையை மீறி மும்பை கிர்காவ் கடற்கரையில் இருந்து ஆசாத் மைதானம் நோக்கி கண்டன பேரணி நடத்திய ராஜ்தாக்கரே மீது எந்த நடவடிக்கையும் இல்லை. இதுதான் இந்திய மதச்சார்பின்மையா என மக்கள் புலம்புகின்றனர். இந்நிலையில் இந்த இந்த்துவா பூனைகளுக்கு யார் மணி கட்டுவது என்று மக்கள் எதிர்பார்த்த நிலையில் அபூ ஆஸ்மியின் சவால் உள்ளபடியே ஆறுதல் தருவதாக உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக