அல்லாஹ்வின் திருப்பெயரால் ...
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் தேர்தல் நிலைப்பாடு எனும் பெயரில் சமுதாயத்தில் குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் நமது குழுமத்திலும் வெளியிலும் செய்தி பரப்பப் படுகிறது!
சகோதரர் எஸ்.எம்.பாக்கர் தலைமையிலான இந்திய தவ்ஹீத் ஜமாஅத் செயற்குழு வருகின்ற 20.3.11 அன்றுதான் சென்னையில் கூடி தனது
தேர்தல் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்க உள்ளது!
இந்நிலையில் சமுதாயத்தில் குழப்பம் ஏற்படுத்த வேண்டும் நோக்கிலும் சகோதர இயக்கங்களுக்கு மத்தியில் குரோதம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் செயல் படுவோர் யாராக இருந்தாலும் 'குழப்பம் கொலையை விடக் கொடியது! எனும் இறைவசனத்திற்கு அஞ்சிக் கொள்ளுமாறும், 'தீயவன் ஒரு செய்தியை கொண்டு வந்தால் அதை தீர விசாரித்து கொள்ளுங்கள் ! இல்லையேல் அறியாமல் ஒருகூட்டத்தாருக்கு தீங்கிழைத்து பின்னர் அதற்காக வருந்த கூடும்' எனும் இறை வசனத்தையும் நினைவூட்டுகிறோம்!
இவண் : செங்கிஸ் கான்
மாநில செயலாளர்
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்
. 3 போஸ்ட் ஆபீஸ் தெரு,
மண்ணடி சென்னை-1
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக