செவ்வாய், 8 மார்ச், 2011

அதிமுகவுடன் விஜயகாந்த் கூட்டணி; அன்று சொன்னது அர்த்தமற்றது!

டவுளோடும் மக்களோடும் தான் கூட்டணி' என்று முழங்கி கடந்த தேர்தல் வரை தனிக்கடை போட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் எதிர்பார்த்த 'வியாபாரம்' நடக்காததால், வழக்கமான அரசியல்வாதிகள்  போல் கொள்கையை தூக்கி மூட்டை கட்டிவிட்டு, போயஸை நோக்கி நடையைக் கட்டி நாற்பத்தியொரு தொகுதிகளை அள்ளிக்கொண்டு வந்துவிட்டார்.
 
கடந்த தேர்தல் வரை  விஜயகாந்த் கட்சிக்கு கணிசனமான வாக்கு கிடைத்ததற்கு அதிமுக மற்றும் திமுகவிற்கு எதிரான வாக்குகளும், மாற்றத்தை விரும்பும் சிலரின் வாக்குகளும் தான் காரணமாக  அமைந்தது. அதோடு சில இடைத்தேர்தலில் அண்ணாதிமுக தேர்தல் புறக்கணிப்பு செய்ததும் விஜகாந்தின் வாக்கு வங்கி உயர காரணமாகியது. ஆனால் இப்போது விஜயகாந்த் தனது கொள்கையை விட்டு கூட்டணி கண்டுள்ளதால் அவருக்கு இருப்பதாக கூறப்படும் எட்டு சதவிகித வாக்கில் இறங்குமுகமே ஏற்படும் என்கின்றன்றனர் அரசியல் ஆய்வாளர்கள். மேலும் விஜயகாந்திற்கு அதிமுக ஒதுக்கியுள்ள சீட்டுக்கள் மிக மிக அதிகம் என்றும், பாமகவை கழகங்கள் மாறி மாறி வளர்த்து விட்டது  போல், விஜயகாந்தின் வளர்ச்சிக்கு ஜெயலலிதா தன்னையறியாமலேயே அடித்தளம் அமைத்து தந்துவிட்டார் என்ற கருத்தும் அரசியல் அரங்கில் நிலவுகிறது.
 
அடுத்து அரசியல்வாதிகள் அணிமாறுவதும், அணி சேர்வதும் சகஜம்தான் என்றாலும், கூட்டணி வைத்து போட்டியிடுபவர்களை கடந்த காலங்களில்  கடுமையாக விமர்சித்தவர் விஜயகாந்த். அதிலும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இவரின் கடும் தாக்குதலுக்கு உள்ளானார். ராமதாஸ் பற்றி விஜயகாந்த் அன்று;
 
'அஞ்சு வருசத்துக்கு வேட்டிய[திமுக] துவைச்சுப் போடுறது; அஞ்சு வருசத்துக்கு சேலைய[அதிமுக] துவைச்சுப் போடுறது இதெல்லாம் ஒரு பொளப்பா'..?
 
கூட்டணி சேர்வது பற்றி விஜயகாந்தின் சூப்பர் விளக்கம் அன்று;
''திமுக, அதிமுக ரெண்டு கட்சிகளோட கொள்கை என்ன தெரியுமா? கூட்டுச்சேர்; கொள்ளையடி;பங்குபிரி என்பதுதான்'!
 
அப்ப விஜயகாந்த் அதிமுகவோட கூட்டுச்சேர்ந்தது இதுக்குத்தானான்னு நாம கேட்கல; அப்பாவி வாக்குவங்கி கேக்குறான். விஜயகாந்த் பதில் சொன்னா நல்லாருக்கும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக