புதன், 16 மார்ச், 2011

முஸ்லிம் வேட்பாளர்களை ஆதரிப்போம்- இதஜவின் சமுதாய நலன் சார்ந்த செயற்குழு முடிவு!

இறைவனின்  திருப்பெயரால் ...
அல்லாஹ்வின் பேரருளால், இன்று (15.03.2011) சென்னை இம்பிரியல் ஹோட்டலில் நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் செயற்குழு மிக உற்சாகத்துடன் சிறப்பாக நடைபெற்றது.

அதில் கலந்து கொண்ட மாவட்ட நிர்வாகிகள் அனைவரின் ஏகோபித்த முடிவின்படி கீழ்கண்ட தீர்மானத்தை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகம் முடிவு எடுத்தது. அல்ஹம்துலில்லாஹ்.

  1. இட ஒதுக்கீட்டு குளறுபடிகளை நீக்கி, இட ஒதுக்கீட்டை  5%  ஆக்கிதருவது எனும் கோரிக்கையை ஏற்று வாக்குறுதி அளித்ததன் அடிப்படையில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு!
  2. அதே சமயம் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு முன்னுரிமை அளித்து அவர்கள் எந்த கட்சியை சேர்ந்து இருந்தாலும் அவர்களை ஆதரிப்பது என முடிவு!
  3. முஸ்லிம் வேட்பாளர்களுக்கிடையில்  நேரடி மோதலை தவிர்க்க முயசிப்பது.  முடியாத  பட்சத்தில் அவர்களில் சிறந்தவர்களை ஆதரிப்பது!    
  4. புதுவையில் முன்னாள் முதல்வர் ரங்கசாமியின் என்..ஆர்,காங்கிரஸ் அங்கம் வகிக்கும் அதிமுக கூட்டணியை ஆதரிப்பது  எனவும் முடிவு!
  5. பாபர் மஸ்ஜித் ,மற்றும் மத்தியில் இட ஒதுக்கீடு விசயங்களில்   தொடர் துரோகம் இழைக்கும் காங்கிரசுக்கு பாடம் புகட்டும் விதமாக அதை எதிர்த்து பிரசாரம் செய்ய முடிவு! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக