குவைத் சுதந்திர தின பொன்விழாவை கடந்த 25 -26 தேதிகளில் சிறப்பாக கொண்டாடியது குவைத் அரசு. இதையடுத்து, குவைத் அதிபர் ஷேக் சபா அல் அஹ்மத் அவர்களின் உத்தரவின் பேரில், பங்களாதேஷில் உள்ள குவைத் தூதரகம் சார்பாக ஒரு லட்சம் பேருக்கு உணவு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. வங்கதேச தலைநகர் டாக்காவின் பல்வேறு பகுதிகளில் இந்த உணவு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
இராக் அதிபராக இருந்த சதாம் ஹுசைன், குவைத்தை ஆக்கிரமித்தபோது, உரியநேரத்தில் தனது கண்டனத்தை பதிவு செய்தது மற்றும் மீட்புப் போரில் பங்கெடுத்தது ஆகிய சேவைகளை செய்த பங்களாதேஷின் செயல்பாட்டை மனதில் கொண்டே இந்த உணவு விநியோகம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேற்கண்ட இந்நிகழ்ச்சியில் பங்களாதேஷுக்கான குவைத் தூதர் அலி அல் தபிரி, மூன்றாவது செயலாளர் அனஸ் அல் சலூம் மற்றும் யூசுப் புதய்யிர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக