வெள்ளி, 18 மார்ச், 2011

லிபியாவுக்கு நிவாரணப் பொருட்கள்; குவைத் அனுப்பியது!

லிபியாவில் ஒரு மாத களமாக நீடித்துவரும் ஆட்சியாளருக்கு எதிரான கிளர்ச்சி ஒரு உள்நாட்டு போராகவே உருவெடுத்துள்ளது. இந்த கிளர்ச்சியில் நூற்றுக் கணக்கானோர் மாண்டுள்ளனர். ஆயிரக்கணக்கனோர் காயமுற்றுள்ளனர். இந்நிலையில், லிபியாவில் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரண பணிக்காக, குவைத் அதிபர் ஷேக் சபா அல் அஹ்மத் சபா அவர்களின் உத்தரவின் பேரில், 14 டன் எடையுள்ள மருந்துப் பொருட்கள் உள்ளடக்கிய நிவாரணப் பொருட்கள் குவைத் சார்பாக அனுப்பப் பட்டுள்ளதாக செய்திகள்  கூறுகின்றன. மேலும், துனிசியா-லிபியா எல்லைப் பகுதி நிவாரணப் பணிகளுக்காக ஒரு மில்லியன் டாலர் ஐ.நாவின்[UNHCR ] வசம் குவைத் வழங்கியுள்ளதாகவும் ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக