வெள்ளி, 25 மார்ச், 2011

தன்மானக் குரல் எழுப்பிய சகோதரி ஃபாத்திமா முஸஃப்ஃபர் நீக்கம்!

தாய்ச்சபைக்கு திமுக வழங்கிய மூன்று சீட்டில்  ஒன்றை பிடுங்கிய திமுகவின் அடாவடி அரசியலை கண்டித்து தன்மானக்  குரல் எழுப்பியவர்  சகோதரி ஃபாத்திமா முஸஃப்ஃபர். அதோடு கருணாநிதியின் இந்த சந்தர்ப்பவாத அரசியலை கண்டும் காணமல் அமைதி காக்கும் தாய்ச்சபையின் தலைவர் காதர் மொஹிதீன் பதவி விலக வேண்டும் என்றும்  துணிந்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் கர்ஜித்தார் சகோதரி ஃபாத்திமா முஸஃப்ஃபர். திமுகவால் பிடுங்கப்பட்ட ஒரு தொகுதி மீண்டும் தாய்ச்சபைக்கு  கிடைத்ததற்கு இவரது இவரது போர்க்குரலே கராணம் என்றால் மிகையல்ல.  அப்படிப்பட்ட ஃபாத்திமா முஸஃப்ஃபர் தாய்ச்சபையில் இருந்து தற்காலிகமாக  நீக்கப்பட்டுள்ளதாக   அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
 
இது ஒருபுறமிருக்க, திமுக ஒரு தொகுதியை பிடுங்கியபோதும் அசாத்திய மவுனம் காத்த  தாய்சபையின் செயலை பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஃபாத்திமா முஸஃப்ஃபர் சாடும்போது, அவருடன் மவ்லவி ஹாமித்பக்ரியும்  உடனிருந்ததாக பத்திரிக்கையில் படங்கள் வெளியானதே! அந்த ஹாமித்பக்ரி மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என தெரியவில்லை. இவ்வாறு  நாம் கேட்பது அவர் மீதான வெறுப்பில் அல்ல. மாறாக அப்படி அவரும் நீக்கப்பட்டால் மீண்டும் ஏகத்துவ பிரச்சார பாதைக்கு திரும்பிவிட மாட்டாரா என்ற நப்பாசையால்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக