மூவரின் பிரார்த்தனைகள் சந்தேகத்திற்கிடமின்றி அல்லாஹ்விடம் ஒப்புக்கொள்ளப்படுகின்றன:
- தந்தையின் பிரார்த்தனை,
- பிரயாணியின் பிரார்த்தனை,
- அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனை
(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: அபூதாவுத்).
நமது ரப்பிடம் உறுதியுடன் பிரார்த்திப்போம்!
ஒரு முஸ்லிம் அல்லாஹ்விடம் கேட்கும் பிரார்த்தனையில் பாவமான விடயமோ, உறவுகளை துண்டிக்கும் விடயங்களோ இல்லாமல் இருக்கும் போது அவனது பிரார்த்தனைக்கு இம் மூன்றில் ஏதாவது ஒன்றை அல்லாஹ் வழங்காமல் இருக்கமாட்டான்:
- அவனது பிரார்த்தனையை ஏற்று அவன் கேட்டதையே வழங்கிவிடுவான்.
- அல்லது அவனது பிரார்த்தனையை பாதுகாத்து நாளை மறுமையில் அதற்கு கூலி வழங்குவான்.
- அல்லது அவனுக்கு வரவிருக்கும் ஏதவாது ஒரு துன்பத்தை தடுத்துவிடுவான்.
அப்போது நபித்தோழர்கள் அப்படியெனில் நாம் அதிகம் அதிகம் அல்லாஹ்வை பிரார்த்திப்போம் என கூறினர், அதற்கு அல்லாஹ்வின் தூதர் அல்லாஹ் அதை விட அதிகம் வழங்குபவனாகவே இருக்கின்றான் என்றார்கள்.
(அறிவிப்பவர்: அபூ ஸஈத் (ரலி), ஆதாரம்: அஹ்மத்).
***************************************************
-மவ்லவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அவர்கள் தொகுத்து, இஸ்லாம் கல்வி.காம் என்ற தளத்தில் வெளியான ''மூன்று செய்திகள்' என்ற கட்டுரையிலிருந்து நன்றியுடன்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக