புதன், 11 ஜூலை, 2012

அழுகையை நிறுத்த சிறுமிக்கு சூடு: அங்கன்வாடி பணியாளர்கள் சஸ்பெண்ட்.

அண்ணையின் அரவணைப்புத் தேடும் அரும்பு வயசு எனக்கு...!
ஆனாலும் அவசரமாய் சேர்த்தனர் அங்கன்வாடியில்....!!

அம்மாவின் நினைவில் அழுத என்னை அரற்றினாள் அங்கொரு ஆயா!
அதட்டலில் அடங்கிடுமா அண்ணையின் தேட்டம்!!?

அழுத என்னை கையிலெடுத்தாள் ஆயா..!
ஆறுதல் தரப்போகிறாள் என்றே நினைத்த நொடியில்...
என் கால்களில் ஆறா ரணத்தை தந்தாளே!!

என்போன்ற மலர்களை கையில் சூடி கொஞ்சலாம்...!
காலில் சூடிடுதல் முறையோ....!!
ஆயா என்பவள் அரவணைப்பில் இருக்கணுமே இன்னொரு தாயாய்...!!!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக